Friday, October 23, 2009

Savitha Aunty

விதா பாபி ஒரு நடுத்தர வயது குடும்பப் பெண். கொஞ்சம் மாடர்னாக இருப்பாள். சேலைதான் அணிவாள். கோதுமை நிறம். நல்ல உயரம். மதமதர்த்த உடல்வாகு. அந்தக் காலத்து கர்ணன் பட கதாநாயகிகள் மாதிரி மாராப்பு விஷயத்தில் தாராளம். திருமணமான இவருக்கு தனிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கையில் போதிய திருப்தி இல்லை. எனவே சவிதா எப்போதும் செக்ஸுக்காக அலைந்துக் கொண்டிருக்கிறாள். சவிதா என்பது அவள் பெயர். பாபி என்றால் இந்தியில் அண்ணி என்று பொருள்.

அவளுடைய காமத்தேவைகளுக்கு இரையாவது வீடு வீடாக பிரா விற்கும் சேல்ஸ்மேன், கிரிக்கெட் விளையாடும் ஸ்கூல் பசங்க, பேமிலி டாக்டர், கஸின்... இப்படியெல்லாம் வக்கிரமாக, வரைமுறையற்ற காம சிந்தனைகளோடு சித்தரிக்கப்படும் படக்கதைத்தொடர் (காமிக்ஸ்) ஒன்று இந்தியாவில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது தெரியுமா?

வேறெங்கு? நம்ம இண்டர்நெட்டில் தான். பல வருடங்களாக ‘பிட்டு, பிட்டாக’ ஆங்காங்கே போடப்பட்டு வந்த இந்த கதைத்தொடர், கடந்த மார்ச் 2008ல் பிரத்யேக தனி இணையத்தளம் ஒன்றில் தோன்றி சக்கைப்போடு போட்டது. குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தில் வெகுவிரைவில் ஐம்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். மாதத்துக்கு ஆறு கோடி முறை அந்த இணையத்தளம் ரசிகர்களால் சுடச்சுடப் பார்வை இடப்பட்டது. இந்தியாவில் அதிகம் பார்வையிடும் இணையத்தளங்களின் பட்டியலில் 82வது இடத்தைப் பிடித்த இணையத்தளம் அது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பத்து இந்திய மண்டல மொழிகளிலும் இந்த களத்தில் கதைகளை படிக்கலாம்.

அப்படி என்னதான் சவிதாபாபி இணையத்தளத்தில் இருக்கிறது என்று குறுகுறுப்பு வருமே?
சவிதா ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்டில் வசிக்கிறாள். அவளது கணவன் அசோக் ஒரு தேவாங்கு. கம்பெனி ஒன்றில் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வீட்டு வேலை பார்ப்பதில்லை. தாம்பத்யம் அவனுக்கு எப்போதாவது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி.

சவிதாவோ தாம்பத்திய சுகத்துக்கு ஏங்குகிறாள். வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனில் தொடங்கி, அவளுடன் பழகும் பல ஆண்களோடு திகட்ட, திகட்ட உறவு கொள்ளுகிறாள். கடைசியாக ஒரு பிரபல நடிகனோடும் கூட. சவிதாவின் செக்ஸ் அனுபவங்கள் மட்டுமே சதைகள். மன்னிக்கவும், கதைகள். கதைகளுக்கான தலைப்புகள் கூட வித்தியாசமாக இருக்கும். உதாரணத்துக்கு, சேல்ஸ்மேன் கதைக்கு “பிரா விற்பனையாளனின் விசிட்”,
நம்மூரின் வழக்கமான மூன்றாந்தர பிட்டு படங்களின் கண்ணறாவி கதைகள் தான் சவிதா பாபி கதைகளும். மொத்தம் பண்ணிரண்டு கதைகள் இந்த தொடரில் வண்ணச் சித்திரங்களோடு வெளிவந்திருக்கிறது. சவிதா கதை சொல்வதைப் போன்ற பாணியிலேயே எல்லாக் கதைகளும் அமைந்திருக்கின்றன. நகைச்சுவையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்த பார்வையை தருகிறோம், ‘இந்தியப் பெண்களுக்கும் செக்ஸ் ஆசைகள் உண்டு’ (?) என்கிற யதார்த்தத்தை உலகுக்கு சொல்கிறோம் என்ற போர்வையில் அருவருக்கத்தக்க, வரைமுறையில்லாத செக்ஸ் கதைகளாக போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தில் மதிப்போடு பார்க்கப்படும் ‘அண்ணி’ என்ற உறவுமுறையை இதற்காக பயன்படுத்திக் கொண்டதும் ஆபாசத்தின் உச்சம்.

யிரக்கணக்கான செக்ஸ் இணையத்தளங்கள் இருக்க, சவிதா பாபி தளம் அடைந்த பரபரப்பான புகழுக்கு ஒரே ஒரு காரணத்தை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். “எல்லா இணையத் தளங்களிலும் எடுத்த உடனேயே ‘முழுக்க’ காட்டி விடுகிறார்கள். ஒரேயடியாக எல்லாமே புஸ்ஸென்று அடங்கிப் போய்விடுகிறது. ஆனால் சவிதா பாபியோ கதைகளின் ஆரம்பத்தில் புடவை அணிந்திருக்கிறாள். செந்தூரம் வைத்திருக்கிறாள். தாலி கட்டியிருக்கிறாள். ஒவ்வொரு கதையிலும் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றுகிறாள். ஒவ்வொன்றாக அவிழ்க்கிறாள். இந்தப் போதை அளப்பறியது. அனுபவித்து பார்த்தால் தான் புரியும்” என்கிறார்கள்.


இத்தனைக்கும் மற்ற செக்ஸ் தளங்களில் நேரடியாக பெண்களின் அரை மற்றும் முழு நிர்வாணமாக போட்டோக்களே உபயோகப்படுத்தப் படுகிறது. சவிதா பாபியிலோ ஓவியரால் வரையப்பட்ட படங்கள்தான். “டைரக்ட் போட்டாவா இருந்தாலும் கூட சில ஆங்கிள்ஸை ரசிக்க முடியாது. சவிதா பாபியிலே வரையப்படுற ஆங்கிள்ஸ் நாம சற்றும் எதிர்பார்க்காதது. நம்ம கற்பனைக் குதிரைய தட்டிவிட்டு, தடதடன்னு ஆர்வத்தை தூண்டுது” என்று கிறங்கிப்போய் கிசுகிசுக்கிறார்கள் ரசிகர்கள்.

சவிதாபாபியை நடத்துபவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இந்தியாவில் போர்னோ சைட்டுகள் (செக்ஸ் இணையத்தளங்கள்) நடத்த தடை இருப்பதாலேயே, வெளிநாட்டு சர்வரில் இருந்து நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இண்டியன் போர்ன் எம்பயர் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த தளம் பதியப்பட்டிருக்கிறது. இந்த அற்புதமான இலக்கியத்தை எழுதுபவர் தேஷ்முக் என்றும் ஓவியங்கள் வரைபவர்கள் டெக்ஸ்டார் மற்றும் மேட் என்றும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இவை பொய்யான புனைபெயர்கள்.

இந்த தளம் சரியாக சர்ச்சைக்கு கச்சை கட்டியது ஒரு நடிகனோடு சவிதா சல்லாபித்த கதை வந்தபோது. நடிகராக சித்தரிக்கப்பட்டு வரையப்பட்டது அமிதாப் பச்சனின் உருவம் என்பதால் வட இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செக்ஸ் கதையில் எப்படி அமிதாப்பை தவறாக சித்தரிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் பாய்ந்தார்கள். ஆனால் தளத்தை நடத்துவது யாரென்றே தெரியாத நிலையில், காற்றில் கத்தி சுத்துவதைப் போல சில நாட்களுக்கு கொந்தளித்துவிட்டு பிறகு வேறு வழியில்லாமல் அடங்கிப் போனார்கள். இதே நேரத்தில் மும்பை மீடியாக்கள் பலவும் சவிதாபாபி தளம் குறித்த ஆபத்தை இந்திய கலாச்சார அமைச்சகத்துக்கு அலாரம் அடித்தார்கள். வழக்கம் போல பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

விதாபாபிக்கு இரையானவர்கள் பெரும்பாலும் டீனேஜர்கள். குறிப்பாக மாணவர்கள். இந்த கதைவரிசையை தொடர்ந்து வாசித்து வந்த பள்ளி மாணவன் ஒருவன், தனது ஆசிரியைக்கு ஆபாசமான எம்.எம்.எஸ். ஒன்றினை அனுப்பியபோது பெங்களூரே அதிர்ந்துப் போனது. இத்தனைக்கும் பயல் ஐந்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக கர்நாடகா காவல்துறையின் சைபர் கிரிம் பிரிவு சவிதாபாபி தளத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதுமட்டுமன்றி தொடர்ந்து வந்த பல புகார்களின் அடிப்படையிலும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் சவிதாபாபி தளத்தை தடை செய்தது. ஆபாசம், ஆணாதிக்கம், பெண்களை பலவழிகளிலும் கொச்சைப்படுத்துவது என்று காரணங்களை அடுக்கியது. இந்த தளம் பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்று இண்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சேவை நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டது.

சவிதாபாபியை தரிசிக்கும் கோடிக்கணக்கானவர்களில் 80 சதவிகிதம் பேர் இந்தியர்களாகவே இருந்தார்கள். இந்தியாவில் முடக்கப்பட்டதால் தளம் ஆட்டம் கண்டு விட்டது. உடனே தளத்தை நிர்வகித்து வந்தவர்கள் ‘சேவ் சவிதா’ (சவிதாவை காப்பாற்றுங்கள்) என்றொரு அமைப்பை இண்டர்நெட்டில் நிறுவி, இந்திய அரசுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள்.

“ஆயிரக்கணக்கான செக்ஸ் தளங்கள் இந்தியாவில் காணக்கிடைக்கையில் சவிதாபாபிக்கு மட்டும் ஏன் தடை என்று இந்தியர்களில் யாராவது ஒருவர் தகவல் அறிமை உரியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசை கேள்வி கேட்கவேண்டும். நாங்கள் ஐரோப்பாவில் இருப்பதால் இதுபற்றி இந்திய அரசிடம் பேசமுடியவில்லை” என்று தளத்தை நிர்வகித்து வந்ததாக கூறப்பட்ட தேஷ்முக் கேட்டுக் கொண்டார்.

இதுவரை தளத்தை ரசித்து வந்தவர்களாக இருந்தாலும், தடை என்றதும் பலரும் பதுங்க ஆரம்பித்தார்கள். சவிதாவுக்கு ஆதரவாக அரசை எதிர்த்து யாரும் சவுண்டு விட தயாராக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் பொறுத்துப் பார்த்த நிர்வாகம் பூனைக்குட்டி மாதிரி நைசாக வெளியே வந்தது. புனீத் அகர்வால் என்பவர் தளத்தை தான் நடத்தி வந்ததாக ஒத்துக் கொண்டார். சவிதாபாபி தளத்தின் சேவைகளை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக அறிக்கையும் விட்டார். இவர்தான் தேஷ்முக் என்ற பெயரில் தளத்தின் நிர்வாகியாகவும், கதையாசிரியராகவும் இருந்தவர்.

“சவிதாபாபியின் சொந்தங்களே! கனத்த இதயத்தோடும், கண்களில் வழியும் கண்ணீரோடும் சவிதாபாபி தளத்தின் சேவைகளை நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை ஆதரவு கொடுத்த வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. சொந்த குடும்பப் பிரச்சினைகளால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்!” என்று செண்டிமெண்டலாக அறிக்கை விட்டு தப்பித்துக் கொண்டார். கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு மீண்டும் சவிதாபாபி வருவாள் என்று ஆவலோடு ஜொள்ளு விட்டு, கணினி மேல் விழிவைத்து காத்திருந்தவர்கள் நொந்துப் போனார்கள்.
சவிதாபாபியின் சகாப்தம் இந்த ஜூலை மாதத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

செக்ஸ் தளங்கள் எதுவும் இந்தியாவிலிருந்து அனுமதி பெற்று செயல்பட முடியாது. அதே நேரம் அயல்நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான தளங்கள் அஜால் குஜாலாக , புதிது புதிதாக, புற்றீசல் மாதிரி தொடங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சவிதாபாபியின் வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, குறிப்பாக இந்தியப் பெண்களை ஆபாசமாக சித்தரித்து ஏராளமான தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் இணையத் தளங்கள் இவ்வகையில் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது. இவற்றில் மூவாயிரம் தளங்கள் தொடர்ந்து கொலைவெறியோடு இயங்கி வருகிறது என்பது முக்கியமானது. ஒரு சவிதாபாபியை முடக்கிவிட்ட இந்தியா, மீதியிருக்கும் முப்பதாயிரத்து சொச்சம் தளங்களை என்ன செய்யப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நம்ம ஊரில் கூட சில வருடங்களுக்கு முன்பாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையத்தளங்களில் பிரசுரித்ததாக கூறி ஒரு டாக்டர் கைதானார். அவர் மேல் பல பிரிவுகளிலு வழக்கு தொடரப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கிறார். எல்லாம் ஓக்கே. ஆனால் அவர் நடத்தி வந்த இணையத்தளம் இன்னமும் வெற்றிகரமாக நடந்துகொண்டு தானே இருக்கிறது? டாக்டர் எடுத்த செக்ஸ் படங்கள் இன்னமும் அத்தளத்தில் இருக்கத்தானே செய்கிறது? காரணம். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் தளம் அது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதி பெற்று செக்ஸ் தளங்களை நடத்திக் கொள்ளலாம். இண்டர்நெட் பாவிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பன்மடங்காக பெருகி வருவதால், இந்தியர்களை குறிவைத்து அயல்நாடுகளில் இருந்து ஆபாசத்தளங்களை நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தத் தளங்களை இங்கே இருப்பவர்கள் பார்வைக்கு தடை செய்வதுதான் இதற்கிருக்கும் ஒரே தீர்வு. அப்படியில்லாமல் ஏதோ ஒரு தளத்தை அப்போதைக்கு தடை செய்து, ஆயிரம் தளங்களை சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

வளைகுடா நாடுகளில் வழங்கப்படும் இண்டர்நெட் சேவையில் இப்பிரச்சினைக்கு சரியான முன்னுதாரணம் உண்டு. அந்நாடுகளில் ஆபாச இணையத்தளங்களை பயனாளர்கள் பாவிக்க முற்றான தடை உண்டு. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களே இணையத்தளங்களை வடிகட்டி அனுப்புவதால் தடை வெற்றிகரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவும் வளைகுடா நாடுகளை இவ்விஷயத்தில் பின்பற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரமிது.

No comments:

Post a Comment